மாதவப்பாட்டு
Tuesday, June 5, 2012
மனமொழி வெண்பா - 1
ஈதென்ன மானிட இப்பழக்கம் எவ்விதம்
சூதென்ன சூழ்ந்ததோ சூத்திரமோ - தீதென்ன
நன்றென்ன தேராயோ நற்பச்சை மாமலைக்
குன்றன்ன மேனியனைக் கூறு .
ஆழியோன் வாழி
ஆழியிலே அணையென அரவத்தைக் கொண்டவா
தூளியிலே ஆடையிலே துட்டர்களை வென்றவா
தாழியுறு வெண்ணெய் தாயறியா துண்டவா
வாழியவே வாழியவே வளமார் பல்லாண்டே
Monday, July 4, 2011
திருவரங்கத் துதி
இங்குதான் இருக்கிறான் என்னப்பன் என்னிருகண் அன்னப்பன்
அங்கையில் சங்கமும் அங்கியில் முத்தமும் கொண்டு
தங்கிடும் முறுவல் தளிரிதழ் கொண்டு தகைசேர்
அரங்கனாய் வீற்றிட்டான் இலங்கனை வென்ற கோவே
Home
Subscribe to:
Posts (Atom)