Tuesday, June 5, 2012

மனமொழி வெண்பா - 1

ஈதென்ன மானிட  இப்பழக்கம் எவ்விதம்
சூதென்ன சூழ்ந்ததோ சூத்திரமோ - தீதென்ன
நன்றென்ன தேராயோ நற்பச்சை மாமலைக்
குன்றன்ன மேனியனைக்  கூறு .

ஆழியோன் வாழி

ஆழியிலே அணையென அரவத்தைக்  கொண்டவா
தூளியிலே ஆடையிலே துட்டர்களை  வென்றவா  

தாழியுறு  வெண்ணெய் தாயறியா துண்டவா
வாழியவே வாழியவே  வளமார் பல்லாண்டே